Posts

Showing posts from December, 2021

குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளை தான் பேசுவார்கள்

*குழந்தைகள்* *கெட்ட* *வார்த்தை* *பேசுவதில்லை* ... *கேட்ட* *வார்த்தைகளை* *தான்* *பேசுவார்கள்* ... வீட்டில் கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில், மகன்: அம்மா.,அம்மா, "நாய்"னா என்னது மா? அம்மா: உங்க அப்பாதான்டா "நாய்". மகன் : அப்பா.,அப்பா., "பேய்"னா என்னபா? அப்பா: உங்க அம்மாதான்டா "பேய்" மகன்: "முண்டம்"னா என்னபா? அப்பா: நம்ம வீட்டுல கிடக்குதே "நாற்காலி", அதான்டா 'முண்டம்' மகன் : "விஷம்"னா என்னபா? அப்பா : உங்க அம்மா காலைல குடிக்க காபி தாராலே அதான் 'விஷம்' மகன் : "தண்டம்"னா என்னபா? அப்பா : நம்ம வீட்டுக்கு விருந்தாளினு சொல்லிட்டு வாராங்களே அவங்கதான் 'தண்டம்'.. அம்மா கடைக்கு போறாங்க. அப்பா தோட்டத்துக்கு போறாங்க. பையன் மட்டும் வீட்ல தனியா இருக்கான்!!!! இந்த நேரத்துல அவங்க சொந்தகாரங்க வீட்டுக்கு வாராங்க, இப்பா நம்ம பையனின் உபசரிப்பு எப்படி இருந்ததுன்னா, வாருங்கள் தண்டங்களே, வந்து முண்டத்தில் அமருங்கள். பேய் கடைக்கு சென்றுருக்குது! நாய் தோட்டத்திற்கு சென்றுருக்குது! உங்களுக்கு அருந...

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்

*பட்டினத்தார் சொன்னது*...          உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?           உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டதா? பெருத்தன சிறுக்கும்!!  சிறுத்தன பெருக்கும்!!           என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!  நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!  இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!! அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!! அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ...