தத்துவங்கள்
*தத்துவங்கள்* 1. ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள். 2. பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள். 3. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள். 4. எளிய வாழ்வையும், உயர்ந்த எண்ணத்தையும் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். 5. வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். 6. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள். 7. யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். 8. வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள். 9. பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். சொந்தக் காலில் நில்லுங்கள். 10. ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நன்னெறி தரும் சான்றோரின் வரலாற்றைப் படியுங்கள். 11. அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள். 12. சத்தியம் இருக்குமிடத்...