தவறு
தவறு நிகழ்வது வெகு சாதாரணம். நாம் என்ன தான் நம்மைத் திருத்திக் கொண்டே இருந்தாலும் புதுப்புது விஷயங்களில் தவறு நடந்து கொண்டு தான் இருக்கும். அதனால் உங்களையே நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வது மட்டும் புத்திசாலித்தனம் அல்ல. தவறு நிகழும் போது அந்தத் தவறை சரி செய்யவும், அதைப் பாடமாக எடுத்துக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.