Posts

Showing posts from January, 2022

அமைதியான மனம் பெற 8 வழி முறைகள்

*_அமைதியான மனம் பெற 8 வழி முறைகள்* 1. *கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்..*  பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள்.  இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும்.  இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2. *மறக்கவும்... மன்னிக்கவும்...*  இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து.  நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும்.  இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது.  அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3. *பாராட்டுக்காக ஏங்காதீர்கள்....*  உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்...

சுயநலம்

*'சுயநலம்'..!!*                                                                        'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம்.  சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்.  சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல. சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்து தவிப்பார்கள். இன்று பெரும்பாலானவர்கள் அதிகப் படியான மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்.  சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியை பற்றி பொறாமை பட்டுக்கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் ச...

புரிதலை விட தெளிதலே முக்கியம்

ஒருவர் தினமும் கோவிலுக்கு ''திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார் அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி அப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு ??? ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரீங்களே உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க என்று கேட்டாள் அதற்கு அந்த மனிதர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு என்றார் !! கோபமடைந்த மனைவி, முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாங்க என்றாள் அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார் மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது மனைவி , தினமும் லேட்டா வரீங்க கேட்டா திருவாசகத்துக்குப் போனேன் எங்கறீங்க என்ன சொன்னாங்கன்னு கேட்டா ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க நீங்க ""திருவாசகம்"" கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீர் மாதிரித் தான் எதுக்கும் பிரயோஜனம் கிடையாது ...

நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் மட்டுமே என்றென்றும் நலமாக வாழ்கின்றார்கள்

*"எண்ணம் எப்படியோ''..* நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப் பார்த்தான். கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்., இரவு முழுவதும் கண் விழித்துத் திருடி இருப்பான் போலத் தெரிகிறது அதனால் தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக் கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் . "காலையிலேயே நன்றாகக் குடித்து விட்டான் போல இருக்கிறது .அதனால் தான் குடி மயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக் கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் அறிஞர் ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத் தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகையச் செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டுச் சென்றார். கதையின் மையக் கருத்து. 'நாம் எப்படியோ நம் எண்ணங்...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? நோக்கியா செல்போன் நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் பின்லாந்து தான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும் அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டி போட முடியவில்லை. பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால் அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.  ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும் கூட படிப்புக்குக் கொடுக்கப்ப...

Concentrate on the beauty of your behavior

A learned Guru asked a 35-year-old young married man to stand up during his discourse and asked . “You are walking on a beach and a young beautiful girl is coming from the front, so what will you do?” The young man replied - “She will be seen, and I will start looking and admiring her personality.”  Guru ji asked - “After that girl has moved forward, so will you look back too?” The young man said - “Yes, if my wife is not with me .” (everyone laughs in the meeting)  Guru ji again asked - “Tell me how long will you remember that beautiful face?”  The young man replied “Maybe for 5 - 10 minutes, until another beautiful face appears.” and smiled  Guru ji then said to the young man - now just imagine, when you are going from here , I gave you a packet of books and say that the packet should be delivered to a great rich person around 75KM away from your home.   You go to his house to deliver the books. When you see his house, you come to know that he is a b...

3 D's Of Life

. *3 D's Of Life* கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.  அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அவள் நிறைய நன்றி சொல்லிவிட்டு போனாள். மனைவி, எதற்கு நூறு ரூபாய்? கர்ணப் பரம்பரையோ? அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா? என்றாள். கணவன் சிரித்துக்கொண்டு சொன்னான், உனக்கு புடவை நகைகள் எனக்கு துணிகள் செருப்பு பசங்களுக்கு துணிகள் என்று கிட்டத்தட்ட சர்வ சாதாரணமாக லட்சத்தில் செலவு பண்ணினோம்.  ஆனால் அந்த வயசான அம்மா, வயித்துப் பசிக்கு சாப்பிட நம்மைத் தேடி வந்திருக்கா. நம்மாலே ரெண்டு நேரம் அந்தம்மா சாப்பிடும்போது நம்மை மனசார நினைக்குமே. அதனாலே நமக்கு புண்ணியம் கிடைக்க வேண்டாம். அந்தம்மாவோட பசி போகுது. மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது. அது எப்ப வேணும்ன்னாலும் வரலாம். அது என்ன தெரியுமா?  *Disability* - இயலாமை  *Disease* . - நோய்  *Death* . - இறப்பு நமக்கும் இந்த மூன்றும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம...

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்

*பட்டினத்தார் சொன்னது*...          உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?           உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டதா? பெருத்தன சிறுக்கும்!!  சிறுத்தன பெருக்கும்!!           என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!  நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!  இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!! அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!! அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ...

உணர்ந்து கொண்டால் நீயும் ஞானி தான்

*_உணர்ந்து கொண்டால் நீயும் ஞானி தான் !_*  வெள்ளை என்பது நிறம்  கருப்பு என்பது காந்தம்  இயற்கை என்பது அழகு  உணவு என்பது மருந்து ஆடை என்பது மானம்   பணம் என்பது தேவை   ஆங்கிலம் என்பது மொழி  தமிழ் என்பது உயிர்  அம்மா என்பது பாசம்   அப்பா என்பது ஆசான்  குரு என்பது உயர்வு  அன்பு என்பது உறவு  வேஷம் என்பது விஷம்  காதல் என்பது போதை  ஆனந்தம் என்பது ஆயுள்  கவலை என்பது விரையம்  சினம் என்பது நோய்  துன்பம் என்பது பரீட்சை தோல்வி என்பது பாடம்  வெற்றி என்பது தற்காலிகம்  நட்பு என்பது இளமை  குடும்பம் என்பது பற்று   வாழ்க்கை என்பது தொடரும்  எண்ணம் என்பது வாழ்க்கை உலகம் என்பது மாயை  நான் என்பது அறியாமை  இதில் ஏதும் இல்லை நிரந்தரம் இன்று என்பதே நிஜம்    “இதை உணர்ந்து கொண்டால்  நீ மனிதன்"