Posts

Showing posts from March, 2025

இளமை முதுமை

 _இனியும் வேண்டும்_ _*என்பது இளமை..*_ _இனியும் வேண்டாம்_ _*என்பது முதுமை.!*_ _இனி எப்போ விடியும்_ _*என்பது இளமை..*_ _இனி ஏன் விடிகிறது_ _*என்பது முதுமை..!*_ _மறக்க வேண்டாததை _*மறந்து விடுவது இளமை..*_ _மறக்க வேண்டியதை_ _*மறக்காமல் இருப்பது முதுமை..!*_ _சில்லறை தேடி அலைய_ _*நினைப்பது இளமை...*_ _கல்லறை தேடி_ _*அலைய நினைப்பது முதுமை..!*_ _இனித்தான் இனிமையான வாழ்வு_ _*என்பது இளமை...*_ _இனித்தான் கசப்பான_ _*வாழ்வு என்பது முதுமை..!*_ _மறைக்க வேண்டியதை_ _*மறைக்காதது இளமை...*_ _மறைக்க வேண்டியதை_ _*மறைப்பது முதுமை..!*_ _வாழும் காலம்_ _*இனிமை என்பது இளமை..*_ _வாழ்ந்த காலம்_ _*இனிமை என்பது முதுமை.!*_ _விரும்பினாலும்_ _*கிடைக்காதது இளமை..*_ _விரும்பாமலே_ _*கிடைப்பது முதுமை...!*_ _இளமையோ_முதுமையோ_ _*வாழும் வரை இளமையான நினைவுகளோடு மகிழ்ச்சியாக வாழ்வோம்..!*_

பழக்கம் பயிற்சி

 பழக்கம் பயிற்சி .  _*என்னைப் பொருத்தவரை ...*_ _*புத்தகங்களை விட*_ _*மனிதர்கள் தான்....*_ _*வாழ்க்கையை அதிகம்*_ _*கற்றுக்*_ _*கொடுக்கின்றனர்.*_ _*அடுத்த நிலையை*_  _*அடைய முயற்சி செய்*_ _*அடுத்தவன் நிலையை*_ _*அடைய முயற்சி செய்யாதே.*_ 1. எது உயர்ந்ததோ அது தாழும்,  எது தாழ்ந்ததோ அது உயரும். 2. யார் எதிரி யார் நண்பன் காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம்தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள். 3. கடவுள் என்பது அறிவல்ல. அதுவொரு அனுபவம். அது படிப்பறிவல்ல, பட்டறிவு. அது அறிந்து கொள்வதல்ல, கேட்டுத் தெரிந்து கொள்வதும் அல்ல, அது உணரப்படுவது. 4. உறவு என்பது தொடர்பு கொள்ளும் விதத்தில் அமைந்தது. பிறரைத் தொடர்பு கொள்ள தன்னைத் தெரிய வேண்டும். தன்னைத் தெரிய தனிமைப் பழக வேண்டும். தனிமைப் பழகத் தீவிர சிந்தனை வேண்டும். தீவிர சிந்தனை என்பது ஒரு பழக்கம். ஒருவித பயிற்சி.. 5. சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம். அனுஷ்டானத்தைவிட அன்பு முக்கியம். 

Smart work

 சீனாவின் பணக்காரர் சொன்னார்: "நீங்கள் குரங்குகளுக்கு முன்னால் வாழைப்பழங்களையும் பணத்தையும் வைத்தால், குரங்குகள் வாழைப்பழங்களை தேர்ந்தெடுக்கும் ஏனெனில் பணம் பல வாழைப்பழங்களை வாங்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது.  உண்மையில், நீங்கள் மக்களுக்கு வேலை மற்றும் தொழில் வழங்கினால், அவர்கள் வேலை செய்யத் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் ஒரு தொழில் சம்பளத்தை விட அதிக பணம் சம்பாதிக்கும் என்பது பலருக்குத் தெரியாது.  ஏழைகள் ஏழையாக இருப்பதற்கான காரணம், அவர்கள் தொழில் வாய்ப்புகளை அங்கீகரிக்க பயிற்சி அளிக்கப்படாததே.  பள்ளியில் நிறைய நேரம் செலவிடுகிறார்கள், பள்ளியில் கற்றுக்கொள்வது தனக்காக உழைக்காமல் சம்பளத்திற்கு உழைப்பதுதான்.  இலாபங்கள் சம்பளத்தை விட சிறந்தது ஏனென்றால் சம்பளங்கள் உங்களை வாழ அனுமதிக்கும், ஆனால் இலாபங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கும். "