மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்...
மகிழ்ச்சிகரமாக
வாழ 40 வழிகள்...
1. தினமும்
10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு
செல்லும் போது, சிரித்த முகமாக
செல்லுங்கள்.
2. தினமும்
ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல்
அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும்
ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும்
இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய
குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
5. அதிக
நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும்
விஞ்ஞான புத்தகங்களை
படியுங்கள்.
7. உங்கள்
தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு
இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள்
ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும்,
ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி
நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும்
போது...
10. மரங்களிலும்,
செடி கொடிகளிலும் விளையும் உணவு பொருட்களை பச்சையாக, நிறைய
உண்ணுங்கள்.
11. தினசரி
மூன்று நபர்களையாவது மகிழ்ச்சி படுத்துங்கள்.
12. தினமும்
நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள்
உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை
உணருங்கள்,
14. நீங்கள்
எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல்
வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை
உங்களின் மனதில் தினமும் ஐந்து முறை உருவாக்கும்
வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள்
வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று
உணருங்கள்.
17. உங்களின்
காலை உணவை ஓர் அரசன்
போல அருந்துங்கள். மதிய உணவை ஓர்
இளவரசன் போல உண்ணுங்கள். இரவு
உணவை ஒரு பிச்சைக்காரன் போல
உண்ணுங்கள்.
18. நன்றாக
வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும்
அன்பு கொண்டு வாழ்ந்தால், இறைவனும்
உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை
புரிந்து கொள்ளுங்கள்
20. வாழ்க்கையை
'டேக் இட் ஈஸி'யாக
எடுத்து கொள்ளுங்கள்.
21. அனாவசியமான
விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின்
கடந்த கால வாழ்க்கையை மிகவும்
சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார்,
என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய
வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு, உங்களை உருவாக்கிய இறைவனை
தயவுசெய்து கேவல படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய
மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள்
உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும்,
எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்க
தயாராக இருங்கள்.
26. ‘உங்களை
பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று
யோசிப்பதை தவிருங்கள். உங்களை பற்றி
என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை
கைவிடாதீர்கள்.
27. இதுவரை
உங்களை காப்பாற்றி வந்த கடவுள், இனியும் உங்களை
என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை
மனதார உணருங்கள்.
28. நல்லதே
நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய
இன்பத்தில் பங்கெடுத்து கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில்
பாராட்டுங்கள். அவர்களிடம்
நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சி
அளிக்காதவை எதுவாக இருந்தாலும்
அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள்
தேவைக்கு அதிகமாகவே
அனைத்தையும் உங்களுக்கு தருகிற இறைவனுக்கு நன்றி
செலுத்துங்கள்.
32. வாழ்வின்
'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக
நிச்சயம் வந்து விட்டது என்று
நம்புங்கள்.
33. நீங்கள்
எந்த மனநிலையில் இருந்தாலும், நன்றாக குளித்து, சுத்தமான
ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு
நன்மை என்று தோன்றும் செயல்களை
உடனே செய்யுங்கள்.
35. எத்தனை
'பிஸி'யாக இருந்தாலும், குடும்பத்தினருடன்
பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு
உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக
இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி
மற்றவருக்கு பயனளிக்கும் வகையில், ஒரு சிறிய செயலையாவது
செய்யுங்கள்.
38. நீங்கள்
வரம்பே இல்லாத வலிமை பெற்றவர்
என்பதை அறிந்து, எந்த செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. காலையில்
கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்
40. தூங்கும்
முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள்.
Comments
Post a Comment