எது முதிர்ச்சி


ஆதிசங்கரர்  அருளிய 
'எது முதிர்ச்சி? '

பிறரைத்  திருத்த முயல்வதை  விடுத்து 
தன்னைத் திருத்த முனைவது  முதிர்ச்சி.       1

பிறரை அவர்தம் 
இயல்புக ளோடே 
ஏற்றுக் கொள்ள 
முடிவது முதிர்ச்சி.               2

ஒவ்வொருவருமே 
அவரவர் பார்வையில் 
நேர்மையாளரே 
என்பது முதிர்ச்சி.               3

விடாப்பிடிவாதம் 
விட்டுக் கொடுத்து பற்றினை விட்டிடப் 
பயில்வது  முதிர்ச்சி.           4

உறவால் எதையும் எதிர்பார்க்காமல் கொடைக்காகவே கொடுப்பது முதிர்ச்சி.        5

தான்செய்வ தெல்லாம் தன்னுடைய சொந்த அமைதிக் கென்றே உணர்வது முதிர்ச்சி.          6

தன்பேரறிவைத் தரணிக்குணர்த்த முயல்வதை நிறுத்திக். கொள்வது முதிர்ச்சி.          7

எல்லோரும் தன்னை  ஏற்றுக் கொள்ள வேண்டுமென வேண்டா நிலையே முதிர்ச்சி.           8

பிறருடன் தன்னை ஒப்பிட்டுப்  பார்ப்பதை நிறுத்திக் கொள்ளும் நிலையே முதிர்ச்சி.             9

தன்னோடு தானே சமாதான மாக 
இருந்திடு வோரிடம் இருப்பது முதிர்ச்சி.          10

தேவையும்  ஆசையும் 
பிரித்தறிந்  தாசையை விட்டிட முடிந்தால் 
அதுவே முதிர்ச்சி.             11

பருப்பொருள் எதிலும் இன்பம் இருப்பதாக் கருதுவ தொழிந்தால் வருவது முதிர்ச்சி.             12

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்