இன்று ஓர் இனிய தகவல் 01/09/2023
இன்று ஓர் இனிய தகவல் 01/09/2023 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒரு பொருள் மீது ஆசைப்படுகிறோம்.
அதற்காகத் துன்பப்பட்டு அந்தப் பொருளை அடைகிறோம்.
அடைந்த பின்பு ஆசை விலகி விடுகிறதா? இல்லையே?
ஆசை மீண்டும் மறு பொருளுக்குத் தாவி தொடர்ந்து கொண்டே தானே இருக்கிறது.
இப்படி மாறி மாறி ஆசைப்படுவதால் மனித வாழ்க்கை ஆசையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.
தேவையைக் குறைத்துக் கொள்பவனுக்கு மோகத்தினால் ஏற்படும் துன்பமில்லை.
தேவையைக் குறைத்துக் கொள்ளும் மனநிலையை அடைய பக்குவம் தேவை.
மற்றவர்கள் வாழ்க்கையை நாம் வாழ முடியாது.
நம் வாழ்க்கை வேறு. அவர்கள் வாழ்க்கை வேறு என்று வித்தியாசம் முதலில் உணர்ந்து கொள்பவன் ஆசைகளின் பின்னால் ஓடுவதில்லை.
எவனொருவன் ஒரு நொடியேனும் தனக்காக வாழ்ந்து வருகிறானோ அன்று காத்திருக்கிறது துன்பமில்லா பெருமகிழ்ச்சி வாழ்வு வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment